தேவையான பொருட்கள்;-
சிக்கன் -1/2கிலோ
சீரகம் விதை -1டீஸ்பூன்
மல்லிதூள் -1டீஸ்பூன்
முட்டை -1
கார்ன் ப்ளார் - 2டீஸ்பூன்
மிளகாய் தூள் -1/2டீஸ்பூன்
சீரகம் பொடி-1/2டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து பொடியாக கட் செய்தது
மல்லி இலை -சிறிதளவு பொடியாக கட் செய்தது
ப.மிளகாய்- 1 குறுக்காக கீறி நீளமாக கட் செய்தது
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
இஞ்சி-ஒரு துண்டு பொடியாக கட் செய்தது
பூண்டு-4பற்கள் பொடியாக கட் செய்தது
ரெட் கலர்-1 சிட்டிகை
மிளகு பொடி-1டீஸ்பூன் .
சிக்கனில் சிறிதளவு மிளகு தூள் ,உப்பு ,முட்டை,
கார்ன் ப்ளார் ,இஞ்சி பூண்டு 1டீஸ்பூன் போட்டு கலந்து ஒரு பானில்
சிறிதளவு எண்ணெய் விட்டு சிறு தீயில் பொரித்து எடுக்கவும்.
அதனை தணியாக வைக்கவும்.
பிறகு அதே பானில் சீரகம் விதை போட்டு பொரிந்தவுடன்
கட் செய்த இஞ்சி பூண்டு,ப.மிளகாய் ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மல்லி தூள் ,
சீரகபொடி,மிளகாய் பொடி,மிளகு பொடி,கறிவேப்பிலை.மல்லி இலை
போட்டு லேசாக பிரட்டி விட்டு அதில் கலர் பொடியை 2டேபிள் ஸ்பூன்
தண்ணீரில் கலந்து ஊற்றி கால் கப் தண்ணீர் விடவும்.
பிறகு பொரித்த சிக்கனை அதில் சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் வற்றியவுடன்
இறக்கி விடவும் இதனை சிறு தீயில் சமைக்கவும்.
சுவையான சில்லி சிக்கன் ரெடி.
அன்புடன்
சாலிஹாசுபைர்.
0 comments:
Post a Comment